செவ்வாய், 27 டிசம்பர், 2011

.

وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ {108} سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ {109} كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ {110} إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ {111}

பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூரி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். அல்குர்ஆன் 37:108.லிருந்து 110 வரை


அல்லாஹ்வின் சோதனையும் - இப்றாஹீம் நபியின் தியாகமும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

குறிப்பிட்ட ஓர் குடும்பத்தின் மாபெரும் தியாகத்தை நினைவு கூர்ந்து உருவாக்கப்பட்டதே ஹஜ் எனும் இறுதிக் கடமையாகும் இஸ்லாமிய கட்டிடத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் வலுவான ஐம்பெரும் தூன்களில் ஹஜ் ஓர் தூன் ஆகும்.

இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள், அத்துடன் அல்லாஹ்விடம் நேரடியாக பேசியவர்களுமாவார்கள். இன்று நாம் நிலைக் கொண்டிருக்கிற ஏகத்துவத்தை (ஓரிறைக் கொள்கையை) அன்று அவர்களே பல சோதனைகளுக்கிடையில் நிலை நாட்டினார்கள் அதற்காக அவர்களை அந்நாட்டு மன்னன் நம்ரூது என்பவன் நெருப்புக் குண்டத்தில் வீசி எறிய ஏற்பாடு செய்தான் (இது நீண்ட வரலாறாகும் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக மிக சுருக்கமாகத் தருகிறோம்) ஆனாலும் அல்லாஹ் அவரை அவனிடமிருந்து காப்பாற்றினான்.

தன்னுடைய தந்தை விக்ரகம் செய்யக் கூடியவர்களாகவும், விக்ரக வழிபாடு நடத்தக் கூடியவர்களாகவும் இருந்தார். தான் விக்ரக வழிபாட்டை எதிர்ப்பவராக இருந்ததால் தனது வீட்டிலும் தொந்தரவு, வெளியிலும் தொந்தரவு பல சிரமங்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் உயிரைப் பணயம் வைத்து ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள் தவ்ஹீதை நிலை நாட்டினார்கள், அவர்கள் முதுமை அடையும் வரை அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது அவர்களும் மனிதர் என்ற ரீதியில் குழந்தைக்காக அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) அல்குர்ஆன் 37:100      

இப்றாஹீம் நபி(அலை) அவர்களுடைய வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு குழந்தை பேற்றைக் கொடுக்கிறான் ஆனாலும் அக்குழந்தையின் மூலம் அவர்களுக்கு மாபெரும் சோதனையையும், பின்வரக்கூடிய வழித்தோன்றல்களுக்கு மாபெரும் படிப்பினையையும் ஏற்படுத்தினான். அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.37:101.

இப்றாஹீம் நபி (அலை) அவர்களின் தியாகம் :
குழந்தை பிறக்கிறது, குழந்தைப் பிறந்த பின் பச்சிளங்குழந்தையாக இருக்கும் பொழுது தாயையும் பிள்ளையையும் நாடு துறக்கும் படி இறைவனிடமிருந்து கட்டளை வருகிறது அதன் பிறகாரம் நபியவர்கள் தனது மனைவியையும், பச்சிளங்குழந்தையையும் அழைத்துக்கொண்டு வனாந்திரப் பாலைவனத்தில் விட்டு விட்டுத் திரும்புகிறார்கள்.

அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகம் :
அன்னை (ஹாஜரா) அலை அவர்கள் தனது கணவரை நோக்கி இது இறைவனுடைய உத்தரவா ? என்று மட்டும் கேட்டார்கள் அவர்கள் ஆம்! என்றுக் கூறவே வேறெந்த பதிலும் சொல்லாமல் மனித சஞ்சாரமற்ற அந்தப் பாலைவெளியில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு தங்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு இறைவனின் மீது அந்த முழு குடும்பமும் நம்பிக்கை கொண்டிருந்தது, என்பதற்கு அன்னை ஹாஜரா(அலை) அவர்களுடைய இச்செயல்பாடு மாபெரும் உதாரணமாகும்.

எந்தளவுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு புற்பூண்டுகள் அறவே முளைத்திடாத, முளைக்க எவ்வழியுமில்லாத பாறாங்கற்களும், மணல் முட்டுகளுமே சூழ்ந்து கானப்பட்ட இடத்தில் தங்கிக்கொள்ள எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணத்தை அல்லாஹ் வீனாக்க வில்லை.

உலக அதிசய நீரூற்று உதயம் :
தனது பச்சிளங்குழந்தை தண்ணீருக்காக அழுவதைக் கண்டு பெற்ற மனம் பதை பதைத்துக்க இங்குமங்கும் ஓடுகிறார்கள்; அதைத் தவிற அவர்களால் வேறெதுவும் அங்கு செய்ய இயலவில்லை காரணம் அவ்விடத்தின் சூழல் அப்படி இருந்தது. ஆனாலும்; நெஞ்சைப் பதறச்செய்யும் குழந்தையின அழுகுரலைக் கேட்டுக் கொண்டு அக்குழந்தையினருகில் வீற்றிருக்க முடியாதவர்களாய் ஓர் மலைக்கும் அடுத்த மலைக்குமிடையில் மலை உச்சி வரை ஏறி நின்று மனித நடமாட்டம் இருக்கிறதா என்று ஓடுகிறார்கள். (இந்த இரண்டு மலைகளுமே ஸஃபா  மர்வா என்றழைக்கப்படுகிறது) உள்ளங்களைப் பார்க்கக்கூடிய ரப்புல் ஆலமீன் அன்னை ஹாஜரா (அலை) அவர்ளுடைய உள்ளம் ஏக இறைவனின் பால் நம்பிக்கைக் கொண்டதை நினைத்து அவர்களுக்கு உதவுவதற்கு முன் வருகிறான் அதன் மூலம் உலகுக்கு தனது வல்லமையை நிலைநாட்டவும் நினைக்கிறான்.

தனது வானவர் மூலம் குழந்தை அழுது கொண்டு கிடந்த காலுக்கடியில் வானவரின்  இறக்கையைக் கொண்டு அடிக்கச் செய்கிறான் அவ்விடத்தில் நீரூற்றுப் பொங்கிப் பாய்கிறது அதனைக் கண்ட அன்னையவர்கள் ஓடோடி வந்து அதனருகில் அமர்ந்து உலக இரட்சகனான ஓரிறைவனை துதித்துக் கொண்டு தங்களது இரு கைகளாலும் மணல்களைக் குவித்து அத்தண்ணீரை ஜம் ஜம் ( நில் நில் ) என்றுக் கூறுகிறார்கள்.

தங்களது கரங்களால் மணல்களைக் குவித்து கட்டிய மணல் அனைக்கட்டுக்குள் அத்தண்ணீர் தேங்கி நின்று கொள்கிறது குழந்தையுடைய தாகம் தனிகிறது அன்னை அவர்களுடைய தாகமும் தணிகிறது.

வல்ல இறைவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றான அந்த ஜம் ஜம் நீரூற்று இனறளவும் அவனுடைய வல்லமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

மக்கா உதயம்
மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தில் அன்னையவர்களுடைய தனிமையைப் போக்கவும் அங்கே ஓர் நகரம் உருவாக்கவும் ஓரிறையாகிய உலக இரட்சகன் மாபெரும் திட்டம் தீட்டுகிறான். அன்னையவர்கள் கட்டிய சிறிய மணல் அனைக்கட்டுக்குள் தேங்கிக் கிடந்த தண்ணீருக்கு மேல் பறவைகள் சூழத் தொடங்குகிறது. அங்கிருந்து வெகு தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஜூல்ஹூம் என்ற வம்சத்தினர் ஓரிடத்தில் பறவைகள் வட்டமிடுவதைக் காண்கின்றனர் பாலைவணங்களில் பயணிக்கும் வழிப் போக்கர்கள் அவ்வாறு மேலே ஓரிடத்தில் பறவைகள் வட்டமிட்டால் அதன் கீழ் தண்ணீர் தேங்கி நிற்க்கும் என்பதை அறிந்திருந்தார்கள்; என்பதால் அங்கு வருகை தருகிறார்கள்.
நீரூற்றுக்கருகில் அமர்ந்திருந்த அன்னையவர்களிடம் நாங்கள் இங்கே குடியமர்ந்து கொள்கிறோம் எனக் கேட்கிறார்கள் இத் தண்ணீரைக் கொண்டு கிடைக்கும் வருமானத்தில் என்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று ஒரு சிறிய நிபந்தனையுடன் அன்னையவர்கள் அனுமதிக்கின்றார்கள்;.

வழிப்போக்கர்கள் அங்கு முகாமிடுகிறார்கள் மக்கள் பல்கிப்பெறுகுகின்றனர் மக்கா உதயமாகிறது அந்நகரம் உம்முல் குரா (நாரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெறுகிறது.

இஸ்மாயில் (அலை) அவர்களின் தியாகம் : 
இப்றாஹீம் நபியவர்கள் மனைவிப் பிள்ளையைக் கண்டு வருவதற்கு இறைவனிடமிருந்து உத்தரவு வருகிறது, அத்துடன் அவர்களது மகனாரை அறுத்து அல்லாஹ்வுக்குப் பலியிடுவதாக கணவு மூலம் அறிவிக்கப்படுகிறது இப்றாஹீம் நபயிவர்கள் தனது மனைவி பிள்ளைகளைக் காண மக்கா நோக்கி வருகின்றார்கள் தனது மகனை அனுகி  அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ''என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். ''என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார். அல்குர்ஆன் 37:102.

எனது அருமைத் தந்தையே தாராளமாக நிறைவேற்றுங்கள் என்றுக் கூறுகிறார்கள் காரணம் அல்லாஹ்வின் மீது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தனது தந்தையின் நபித்துவத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், தந்தை பொய்யுரைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும், இறைவன் நம்மைப் படைத்தான் அவனிடமே நாம் மீள வேண்டியிருக்கிறது அவனுடைய சித்தத்தை நிறைவேற்ற மனித சமுதாயமாகிய நாம் கடமைப் பட்;டுள்ளோம் என்ற நன்னோக்குடன் தன்னை அறுத்து இறைவனுக்குப் பலியாக்கிக் கொள்ளத் தயாராகிறார்கள் தியாகச்செம்மல் இஸ்மாயில் (அலை) அவர்கள்.   

ஷைத்தானை கல்லால் அடிப்பது
தியாகச் செம்மல் இப்றாஹீம் (அலை) அவர்கள் அவர்களது அருமை மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிட அழைத்துச் செல்கிறார்கள் அவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில் ஷைத்தான் அவர்களுடைய மனதில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.

முதலில் அன்னையவர்கள் மனதில் பெற்றப் பிள்ளையை எவராவது அறுத்துப் பலியிடுவார்களா ? என்ற ஊசலாட்டத்தை ஏற்படுததினான்.

அதற்கடுத்து இஸ்மாயில் (அலை) அவர்களது மனதில் இது போன்று ஒருக் காரியத்தை அல்லாஹ் விரும்புவதில்லை இது உன் தந்தையின் தனி விருப்பம் என்பது போல் ஏற்படுத்தினான்.

இறுதியாக இப்றாஹீம்(அலை) அவர்களது மனதில் பெற்றப் மகனை அறுக்கலாமா ? இதை அல்லாஹ் விரும்ப மாட்டான் உமது கனவில் அறிவித்தது இறைவனின் செய்தி அல்ல என்றுப் போடுகிறான் ஒரு கணம் திகைத்துப் போனவர்கள் மீண்டும் தங்களை சுதாரித்துக் கொண்டு இவ்வாறு தடுப்பது ஷைத்தானின் வேலையாகும் என்றுக் கூறி அங்கு கிடந்த சிறிய கற்களை எடுத்து அருகில் வீசி விட்டு தொடர்கிறார்கள்.

இவ்வாறு மூவருடைய மனதில் ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியதாலும் அதில் அவர்கள் வெற்றிப் பெற்றதாலும் அதை நினைவு கூறும் விதமாகவே அங்கே மூன்று இடங்களில் கல் எறியப் படுகிறது.( மாறாக ஷைத்தான் அங்கு வீற்றிருக்கிறான் எனும் நோக்கில் அல்ல)

குர்பானி அறிமுகமாகிறது.
நீண்ட காலங்களுக்குப் பிறகு தவமிருந்துப் பெற்ற மகனுடைய கால்களையும், கைகளையும் கட்டும்பொழுது (அருமைத் தந்தையே இறுகக் கட்டுங்கள் இல்லைனெ;றால் அறுக்கும் பொழுது முண்டி விடுவேன் நீங்கள் மனம் தளர்ந்து விடுவீர்கள் என்று அறுபடப் போகும் மகன் கூறுகிறார். மனதை திடப்படுத்திக் கொண்டு தனது மகனுடைய கால், கைகளை இறுகக் கட்டி குப்புறக் கிடத்திய பொழுது அல்லாஹ் இப்றாஹீம் நபியை அழைத்து ''இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பரிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். அல்குர்ஆன் 37:102. லிருந்து 107 வரை.

அல்லாஹ் மேற்கானும் சம்பவத்தின் மூலம் நரபலியை தடுத்து, கால்நடைகளை பலியிடுவதை மனித சமுதாயத்தின் மீது கடமையாக்கினான்.

உலகில் நடைபெறக் கூடிய ஒவ்வொரு விஷங்களும் இறைவனின் திட்டமிடுதலின் கீழ் செம்மையாக நடைபெறும் என்பதற்கு அறவே ஆள் அறவமற்ற ஓர் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை பிற்காலத்தில் உலகப் பிரசித்திப் பெற்ற இடமாக உருவாக்கியதன் மூலம் அறிவுள்ள மனித சமுதாயம் குர்ஆனின் கூற்றிலிருந்து உலக இரட்சகனாகிய ஓரிறைவனுடைய வல்லமையையும், பேராற்றலையும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளது.

பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூரி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். அல்குர்ஆன் 37:108.லிருந்து 110 வரை

இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருடைய தியாகம் உலகம் முடியுறும் காலம் வரை நினைவு கூறப்பட வேண்டிவையாகும், அதனாலேயே இன்றளவும் நமது ஐந்து நேரத் தொழுகையிலும் அக்குடும்பத்தாருடைய மறுமை வாழ்வுக்காக அத்தஹயாத்தின் இருப்பில் இறைஞ்சும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குப் பணித்தார்கள்,

ஹஜ் செய்யச் செல்வோர் கவனத்திற்கு 
ஹஜ் செய்ய முற்படுவதற்கு முன்பு ஹஜ் ஏன் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கடமையாக்கப்பட்டது ? என்பதை விளங்கிக் கொண்டு முதலில் அந்த தியாகச் செம்மல்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து கொண்டு ஹஜ் செய்பவர்கள் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவும் தங்களையும், தங்களுடைய பொருளாதாரத்தையும் எந்த சூழ்நிலையிலும் இழக்க முன்வர வேண்டும், ஹாஜியார் என்ற பட்டம் பெயருக்குப் பின்னால் வரவேண்டும் என்று நினைக்கக் கூடாது, தியாகி என்றப் பட்டத்தை மறுமையில் அல்லாஹ் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு ஹஜ் செய்ய முற்படுங்கள்.

இஸ்லாமிய ஒவ்வொரு கடமைகளுக்குப் பின்னாலும் உலக மாந்தர்களுக்கு மாபெரும் படிப்பினை இருக்கும் என்பதற்கு ஹஜ் கிரியை ஓர் எடுத்துக் காட்டாகும். மனித சமுதாயத்திடமிருந்து அல்லாஹ் தனக்காக எதிர்பார்ப்பது நேர்த்திக் கடன்களோ, காணிக்கைகளோ அல்ல, மாறாக இறையச்சமும் தியாகமும் மட்டுமே என்பதை இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருடைய இறையச்சமும், தியாகமும் மாபெரும் படிப்பினையாகும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . . அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

.


ஹஜ் சர்வீஸ் நிருவணங்களும்,  அதன் வழிகாட்டிகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



இஸ்லாமிய செல்வந்தர்கள் மீது மட்டும் கடமையாக்கிய ஹஜ் எனும் வணக்கத்தின் பெயரில் ஹஜ் சர்வீஸ் நிருவணங்கள் அவர்களிடம் பணம் பன்னுவதிலேயே குறிக்கோளாக இருப்பார்களேத் தவிற அழைத்துச் செல்பவர்களுக்கு முறையான மார்க்க வழிகாட்டிகளை நியமிப்பதில்லை, மக்காவில் இறக்கி விட்டதும் ஹாஜிகளுக்கு தங்களது நாட்டு விசேஷ உணவுகளை சமைத்து வழங்குவதிலும், நிம்மதியாக உறங்க வைப்பதிலும் அலாதி கவனம் செலுத்துவார்கள், அவ்வாறு நடந்து கொண்டால் நல்ல ஹஜ் சர்வீஸ் நிருவனம் எனும் புகழாரம் தங்களுடைய நிருவனத்திற்கு கிடைத்துவிடும் அதன் மூலம் வருடந்தோறும் பணம் பண்ணலாம்.

முறையான மஹரத்துடன் பெண்களை அழைத்துச் செல்வதில்லைமஹரமில்லாமல் ஒரு பெண் தொலைதூரம் பயணிக்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிட்டுள்ளது, ஆனால் இவர்கள் ( டூப்ளிகேட் ) மஹரத்துடன் அழைத்து வருவார்கள் அதை மார்க்கம் அனுமதிக்கிறதா ? மஹரம் என்று அழைத்து வருபவர்கள் இஸ்லாம் யாருடன் மறைந்திருக்க வேண்டும் என்று கூறுகிறதோ அது மாதிரியான அண்ணிய ஆண்களுடைய பெயரில் மஹரமாக்கி அழைத்து வருவார்கள், இவ்வாறு பெண்களை ஹஜ் செய்யச்சொல்லி மார்க்கம் கட்டளையிட்டுள்ளதா ? என்று ஹஜ் நிருவணங்கள்  கவனிக்க வேண்டும். தங்களது புக்கிங் செய்யப்பட்ட வாகனம் ஃபுல் ஆகிறதா ? என்ற ஒரே கவணத்தில் இருப்பவர்கள் ஹஜ்ஜின் அடிப்படை அமலைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். மக்காவில் சமைத்துக் கொடுப்பதற்கு பேர் பெற்ற பண்டாரியை தேடி அலைபவர்கள் ஹஜ்ஜின் அமல்களை நபிவழியின் அடிப்படையில் சொல்லிக் கொடுப்பதற்கு நல்ல ( தவ்ஹீத் ) மார்க்க அறிஞரை தேடி அலைய மாட்டார்கள். இதனால் வருடந்தோறும் புனித ஆலயத்தில் நிகழும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர். அல்குர்ஆன்  2:16

கல் எறியும் சட்டம்
ஒன்றிரண்டு முறை மினாவில் யதார்த்தமாக ஏற்பட்ட தீவிபத்தைத் தவிற ஒவ்வொரு வருடமும் தவறாமல் நிகழும், மற்ற விபத்துகள் அனைத்தும் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடும் இடமும், ஷைத்தானுக்கு கல் எறியும் இடமும், ஜம் ஜம் கிணற்றருகேயுமாகும் ( இப்பொழுது கிணறு இருக்கும் இடத்தில் தடுப்பு ஏற்படுத்தப் பட்டு விட்டது )  என்பது குறிப்பிடத் தக்கதாகும்.


ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிடும் அமல் ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது திருக்கரங்களால் அதைத் தொட்டார்கள் என்றும், அதை முத்தமிட்டார்கள் என்றும் அறிவிப்புகள் உள்ளன என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை, அன்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அங்கு திரண்டிருக்க வில்லை, இன்றைய நிலை அவ்வாறில்லை அங்குக் குழுமுகிற பல லட்சக் கணக்கான மக்களும் அக்கல்லைத் தொட்டாக வேண்டுமெனில் அது சாத்தியமாகுமா ? என்று சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் அதை தனக்கு சாத்தியமாக்கிக் கொள்வதால் மூச்சு விடக்கூட முடியாத மக்கள் நெரிசலில் ஒருவரோடு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நெருக்குவதில் அங்கு விபத்து ஏற்படுகிறது நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; . . . அல்குர்ஆன் 23:62

அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம் என்று அல்லாஹ் திருமறையில் கூறுவதால் அதன் கூற்றை இதுபோன்ற அமல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லட்சோப லட்ச மக்களும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அக்கல்லை முத்தமிடுவது என்பது சக்திக்கு மீறிய செயலா ? இல்லையா ? என்பதை சிந்திக்க வேண்டும் .( முத்தமிட்டுத் தான் ஆக வேண்டும் என்பது அவசியமில்லை அதை முத்தமிடாமல் திரும்பினால் ஹஜ் நிறைவேறாது என்று எங்கும் கூறப்படவில்லை ) நீங்கள் அறுத்துப் பலியிடுகின்ற பிராணியின் மாமிசமோ அதன் இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைய மாட்டாது. மாறாக, உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.(ஹஜ்: 37)

மேற்கானும் திருமறை வசனப்படி ஹஜ்ருல் அஸ்வத் கல்லுக்கு கீழ்கானும் அடையாளமிடப்பட்ட கோட்டிற்கு கீழ் நின்று கைகளை உயர்த்தி தக்பீர் சொல்லி விட்டு தவாபை தொடர்ந்தால் தவாபுக்கான கூலி கிடைத்து விடும், மாறாக வயதானவர்களையும், இளம்பெண்களையும், சிறார்களையும் முட்டி மோதி தள்ளி விட்டு அக்கல்லை முத்தமிட்டால் அமலுக்கான கூலி கிடைத்து விடுமா ? அந்த அமலுக்கான கூலி கிடைக்குமா ? அல்லது கிடைக்காதா ? என்பது அடுத்த கட்டம் உங்களால் மோதி தள்ளி கீழே விழுந்து காலை கையை உடைத்துக் கொண்டவர் அல்லது உங்களால் மோதி தள்ளப்பட்டு கீழே வீழ்ந்தவர் நெரிசலில் மீண்டும் எழமுடியாமல் மிதிப்பட்டு மரணமடைந்து விட்டால் இதற்கென்ன தண்டனை என்பதையும் புரிந்து வைத்துக் கொண்டப்பின் முட்டி மோதிச் சென்று அக்கல்லை முத்தமிட முயற்சி செய்துகொள்ளுங்கள். அமைதிதவழும் மார்க்கத்தில் பிறந்தவர்கள் அமைதியாக வணக்கவழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

நிச்சயமாக நீ ஒரு கல் தான். நன்மை செய்யவோ அல்லது தீமை பயக்கவோ உன்னால் இயலாது என்பதை நான் அறிவேன். மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் ஒருவேளை பார்த்திரா விட்டால் உன்னை நான் ஒரு போதும் முத்தமிடப் போவதில்லை என்று உமர் (ரலி) அவர்கள் கூறிக்கொண்டு ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள். அறிவிப்பவர்: ஹாபீஸ் இப்னு ரபீஆ(ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம் அக்கல்லுக்கு அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களாhல் வழங்கப்பட்ட மதிப்பு அவ்வளவு தான் ஆனால் முண்டியடித்துக் கொண்டு செல்பவர்களுடைய நோக்கம் அதுவல்ல அதை முத்தமிடாவிடில் ஹஜ் நிறைவேறாது என்பதாகும்.

கல்லெறியும் அமல்  : சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களையும் வீசும் போது தக்பீர் கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதார நூல் : அபூதாவூத் , பைஹகி

சுண்டு விரலால் வீசக்கூடிய கற்கள் எவ்வாறு இருக்கும் ? என்பதை புரிந்து கொண்டு அவ்வாறான கற்களைக் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வீசலாம், அவ்வாறான கற்களைக் கொண்டு வீசினால் பிறர் மீது பட்டு விட்டாலும் கூட பாதிப்பை உண்டு பண்ணாது, மேலும் அடுத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக. வீசியவர்கள் அங்கிருந்து தாமதமின்றி இடம் பெயர்ந்து விடவேண்டும். கூட்ட நெரிசல் கருதி தாமதித்தும் வீசலாம் அவ்வாறு வீசினால் விபத்துக்கள் குறையும். பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல் : புகாரி

கூட்டம் அதிகரிக்கிறது மேலும் நெருங்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது, அதன் மூலம் பல உயிர்கள் பலியாவதற்கு வாய்ப்பிருக்கிறதென்று தனது சிற்றறிவில் எட்டினால் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டு சற்று நேரம் தாமதித்து கல் எறியலாம் என்பதை ஜாபிர் (ரலி) அறிவிக்கும் நபிமொழி பறைசாட்டுகிறது. மேலும் பெரும் பெரும் கற்களைக் கொண்டு வீசுவதால் பலரது மண்டையை அது பதம் பார்த்து விடுகிறது, சிலர் இன்னும் அத்து மீறி செருப்புகளை விட்டு அக்கல் தூனில் வீசுவார்கள் இதுபோன்ற செயல்பாடுகளெல்லாம் அக்கல் தூனில் ஷைத்தனைப் பிடித்து கட்டப்பட்டுள்ளதாக தவறான சிந்தனையில் நடந்து கொள்வதாகும்.

அமைதியாக அமல் செய்து அதன் மூலம் தானும் படிப்பினை பெற்றுப் பிறருக்கும் படிப்பினையை ஏற்படுத்த வேண்டிய ஒரு அமலை கேலிக்குரியதாக்கி தங்களை அறியாமையின் விளிம்பிற்கு இட்டுச்சென்று விடுவதுடன் பிறரது விமர்சனத்திற்கு இஸ்லாத்தை உட்படுத்தி விடுகின்றனர்.

இவ்வாறு செய்யும் பொழுது ஏற்படுகிற விபரீதத்தால் இஸ்லாத்தைப் பற்றின அறிவில்லாத மக்கள் இஸ்லாத்தை விமர்சிக்கத் தொடங்குகிறார்கள், இஸ்லாத்திற்கு வருகை தர நினைக்கின்ற மக்கள் விலகுகிறார்கள், அங்கு ஏற்படுகின்ற விபத்தை அல்லாஹ் ஏன் தடுத்து நிருத்த வில்லை ? ஏன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்றெல்லாம் அல்லாஹ்வுடைய ஆற்றலை அறியாத மக்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்படுகிறது.

இது தான் தெளிவான பாதை என்று தெரிந்து கொண்டப் பின் தங்களுடய உலகாதாயத்திற்காக வேறொருப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் உதவுவதில்லை என்பதற்கு இஸ்லாமிய ஆரம்ப வளர்ச்சி கால கட்டத்தில் நடந்த உஹது யுத்தத்தில் சில உயிர் சேதத்தின் மூலம் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொண்ட மக்களுக்கு படிப்பினையை வழங்கினான். நபிகளார் இட்ட வளையத்தை உடைத்துக் கொண்டு பொருளின் மீது ஆசை கொண்டு ஓடிய ( அதுவும் இஸ்லாமிய வளர்ச்சிக்கென தங்களை முழுவதும் அர்ப்பனித்த ) மக்களை எதிரிகளிடம் தோல்வியுறச் செய்து கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்திக் கொடுத்து அவற்றை அன்றைய மக்களுக்கும் பின் வரும் இஸ்லாமிய வழித் தோன்றல்களுக்கும் மாபெரும்  படிப்பினையாக்கினான். எந்த ஒரு விஷயத்திலும் பேராவல் கொள்வதையும் அமீருடைய கட்டளையை மீறுவதையும் அதிலிருந்து அல்லாஹ் தடை செய்தான்.

அல்லாஹ் கூறுகிறான் : மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப் படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; . அல்குர்ஆன் :  22:30.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக் 

.



அருள் வளம் மிக்க அதிசய ' ஜம் ஜம் ' நீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஹஜ் காலம் வரும் போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு 'ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல' என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன் - கஃபத்துல்தாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது.

அதிஸ்டவசமாகஇந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே 'நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம்' இதை விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்று உகந்ததா ? என்பதை ஆராயச் சொன்னார்.


அமைச்சரவை ஜித்தாவில் உள்ள 'மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்'; இந்தப் பணியை ஒப்படைத்தது. இங்கே தான் நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக (Desal Engineer)  (கெமிகல் இஞ்சினீர் போன்று) பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது .. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.

நான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ம முடியவில்லை.. 


இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறு... கோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு... இபுறாகிம்(அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது! நான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன்.

அந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம்! நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நிண்றபடியே சென்றார் - காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை!

மிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம்  கிணற்றின் நீரைக் குறைத்துஈ நீர் வரும் வழியைக் காணலாமே என்று!  'ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கான' பெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் 'அல்ஹம்துலில்லாஹ்! நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது.' பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.

நான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (Samples)  எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.

நான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை  மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம்! மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது, மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன! ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab) செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.

ஜம் ஜம் நீருக்கும் மற்ற நீருக்கும் (முனிசிபல் தண்ணீர்) உள்ள வித்தியாசம் கால்சியம் மற்றும் மேக்னீசிய உப்பு அளவுகளில் தான். இந்த உப்புகளின் அளவு ஜம்ஜமில் சற்று அதிகம். அதனால் தானோ இந்த நீர் களைத்த ஹாஜிகளுக்கு ஒர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. அது தவிர முக்கியமாக இந்த நீரில் ஃபுளொரைடு உள்ளதால் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு மேலாக ஐரோப்பிய சோதனைச் சாலைகள் (Lab) இந்த நீர் குடிப்பதற்று உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது. மன்னர் பைசல் அவர்களிடம் இந்த செய்தி சென்ற போது, அவர்கள் எகிப்து மருத்துவரின் கூற்றுக்கு மறுப்பாக இந்தச் செய்தியை ஐரோப்பிய பிரசுரத்திற்கு அனுப்பச் செய்தார்.

இது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜம்மை ஆராய, ஆராய மேலும் பல அதிசய தன்மைகள் வெளிவந்து, நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசியங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூர தொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும்.

சுருக்கமாக ஜம்ஜமின் விசேசங்களைக் கூறுகிறேன்.
           
இந்த கிணறு என்றும் வறன்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.  என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக, அது உருவான காலத்திலிருந்து உள்ளது.


அதன் 'குடிக்கத்தக்க தன்மை' ஒவ்வொரு ஆண்டும் உம்ரா, ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலகஅளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை - மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (universal). 
  
பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும், மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா(அலை)தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில்(அலை)அவர்களின் தாகம் தணிக்க, நீருக்காக சஃபா, மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.
    குறிப்பு: Islamway.com எனும் இணையத்திலிருந்து மொழியாக்கம் செய்து ஏனைய தமிழ் இணையங்களில் வெளி வந்தவை.



    அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....